ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர்: மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கொடூரம்..!!

Read Time:2 Minute, 16 Second

downloadசுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலின் கூரை மீது ஏறிய வாலிபர் ஒருவர் மின்சார கம்பிகளை பற்றியதில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen நகர ரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.15 மணி நேரத்திற்கு வாலிபர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது, நிலையத்தில் ரயில் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் நின்றுக்கொண்டு இருந்தது.

இந்நிலையில், ரயிலை நோக்கி வேகமாக சென்ற அந்த வாலிபர் திடீரென ரயிலின் கூரை மீது ஏறி நின்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, கூரை மீது நடந்தபோது மேலே உள்ள மின்சார கம்பியில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கப்பட்ட அந்த வாலிபர் கூரை மீதிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தை தூரத்திலிருந்து பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் விரைந்து வந்து மயக்கமாக இருந்த வாலிபரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அந்த வாலிபர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய St. Gallen ரயில் நிலைய அதிகாரிகள், ’24 வயதான அந்த வாலிபர் எதனால் ரயிலின் கூரை மீது ஏறினார்? அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் மின்சாரத்தால் தாக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரும்பூர் அருகே தலையணையால் அமுக்கி மனைவி படுகொலை: ஓட்டல் தொழிலாளி வெறிச்செயல்..!!
Next post கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு..!!