மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!
Read Time:1 Minute, 9 Second
இலங்கையில் மீட்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் தங்களுடையது என, இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர்.
சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தைச் சேர்ந்த இதன் நிறை 1404.49 கரட் என்று கொழும்பிலுள்ள அழக்குக்கல் நிறுவகம் உறுதிசெய்துள்ளது.
அத்துடன் இதன் பெறுமதி குறைந்தது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் குறித்த மாணிக்கல்லை 175 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையில் ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்று மதிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்த மாணிக்ககல் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Average Rating