வியாசர்பாடியில் வாலிபர் வெட்டி கொலை..!!
Read Time:46 Second
வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (25). இவர் இன்று காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி விட்டது.
குற்றுயிராக கிடந்த அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating