அமெரிக்கா: மசூதியில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற மர்ம நபர் கைது..!!

Read Time:2 Minute, 18 Second

13cda3bc-d689-4542-bc40-b1f30c809c75_S_secvpfஇஸ்லாம் மார்க்கத்தில் சபிக்கப்பட்ட உயிரினமாக பன்றி கருதப்பட்டுகிறது. சாத்தானின் வடிவமாகவும் கருதப்படும் பன்றி என்ற பெயரை தங்களது தாய்மொழியில் கூறுவதும், பன்றியை தீண்டுவதும், அதன் இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாக (ஹராம்) இஸ்லாமியர்கள் கருதி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம நபர் அங்கிருந்த விளக்குகள், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை வீச்சரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதுடன், மசூதி வாசலில் பன்றி இறைச்சியையும் வைத்துவிட்டு சென்றுள்ளான்.

இந்த காட்சிகள் எல்லாம் அருகாமையில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த மர்ம நபரின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அந்த அடையாளத்தை வைத்து அவனை கைது செய்ய புளோரிடா போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

இதையடுத்து, டிட்டுஸ்வில்லி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் ஸ்காஎட் வால்ப் என்ற 35 வயது நபரை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் இன வெறியால் சீக்கியர் குத்திக்கொலை…!!
Next post வியாசர்பாடியில் வாலிபர் வெட்டி கொலை..!!