அரியானாவில் பரிதாபம்: இரு குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை..!!
அரியானா மாநிலத்தில் பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள அம்பாலா மாவட்டம் டேரா சலிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ராம் சிங் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று கணவன் – மனைவியிடையே சிறுபிரச்சனை தொடர்பாக மனஉளைச்சலுக்குள்ளான ராம் சிங்கின் மனைவி சீமா ராணி(31) இன்று தனது மகன் ஹர்மான்(4) மற்றும் ஒருவயது பெண் குழந்தை ஹேமன் பரி ஆகியோர் உடலின்மீது மண்ணெண்ணையை ஊற்றி, தீமூட்டினார்.
அவர்கள் இருவரும் வேதனையால் கதறித்துடித்து கொண்டிருந்த வேளையில் தனது உடலிலும் சீமா ராணி தீமூட்டிக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மூவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating