காரில் வீட்டுக்கு சென்ற பெண் துஷ்பிரயோகம்..!!
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த டிசம்பர் 29-ம் திகதி , வாடகை காரில் சென்ற பெண்ணொருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 28 வயது பெண் ஒருவரே துஷ்பிரயோகத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
காரை பைராகர் மற்றும் காந்தி நகருக்கு இடையே நிறுத்திய ஓட்டுநர் காரில் வைத்தே அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் அந்தப் பெண் கூற, இதுகுறித்து அவரது கணவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, தீபக் மானே கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இவர் பணிக்கு சேர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் குடியிருக்கும் காந்தி நகர் பகுதியில்தான் அந்த சாரதியும் குடியிருந்துள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணை அவருக்கு ஏற்கனவே தெரியும் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Average Rating