மின்சாரம் தாக்கி மாணவன் பலி…!!
Read Time:59 Second
சிகிரிய – இனாமலுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் 18 வயதான மாணவன் ஒருவன், நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனமலுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் பின்னால், அதில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் முச்சக்கர வண்டியை, உயர் அழுத்த நீர் குழாயை பயன்படுத்தி சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீர் என, சுய நினைவு இன்றி கீழே விழுந்துள்ளார்.
பின்னர் அவரை தம்புள்ளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல் துறை ஊடக பிரிவு காரியாலயம் தெரிவித்தது.
இந்த மரணம் மின்சாரம் தாக்கி இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Average Rating