தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று தற்கொலை செய்த கப்பல் மாலுமி…!!

Read Time:3 Minute, 6 Second

8bd7dc6e-2b60-4f47-a65c-856c98d9ae86_S_secvpfதூத்துக்குடி மட்டக்கடை காளியப்பன் தெருவை சேர்ந்த வலேரியான் மகன் தாமஸ்ராய் (வயது 47). இவர் கப்பலில் மாலுமியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெரால்டின் (வயது 40) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சோனா வயது(16) என்ற மகள் உள்ளார்.

கப்பல் மாலுமியான தாமஸ்ராய் ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் வீட்டிற்கு வருவாராம். இதனால் திருமணம் முடிந்த நாளிலிருந்து கணவன்–மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் சந்தேக பார்வையுடன் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் கப்பல் மாலுமியான தாமஸ்ராய் பல நாடுகளுக்கும் சென்று வருவதால் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தாமஸ்ராய் விடுமுறையில் வீட்டிற்கு வந்தார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த ஜெரால்டின் மகளை டியூசனுக்கு அனுப்பியுள்ளார். பின்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தாமஸ்ராய் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

டியூசன் முடிந்து திரும்பிய மகள் கதவை தட்டிபார்த்தும் திறக்காத நிலையில் அருகில் இருந்த உறவினரை அழைத்து வந்து திரும்பவும் கதவை தட்டி உள்ளார். அப்போதும் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பேரும் இறந்த நிலையில் இருந்ததை கண்டு மகளும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தனிப்பிரிவு ஏட்டு பிச்சையா, உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை குத்தி கொலை செய்து விட்டு கப்பல் மாலுமி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வயது மாணவனுடன் 25 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது…!!
Next post சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைதான சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை…!!