சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் கைதான சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் ஜாமீனில் விடுதலை…!!

Read Time:2 Minute, 0 Second

33534f4c-052e-40bc-b74e-5dcb108ab9e1_S_secvpfசிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுமியை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை முத்துப்பாண்டி சகோதரர் கார்த்திக், உறவினர்கள் சுரேஷ்குமார், முத்துராக்கு, டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், கண்டக்டர் நமச்சிவாயம், கார்த்திக்கேயன், ராமநாதன், செந்தில், அரவிந்த் மற்றும் சிறுமியின் அத்தை செல்வி அவரது மகன் ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரபரப்பான இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சிறுமியின் சகோதரர் கார்த்திக், ஏற்கனவே ஜாமீன் பெற்று வெளியே வந்து விட்டார். இந்த நிலையில் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர், உறவினர் சுரேஷ்குமார், செந்தில், அரவிந்த் ஆகியோர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சிவகங்கை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 4 பேரும் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளதால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதாக கூறி உத்தரவிட்டார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 4 பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூத்துக்குடியில் நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொன்று தற்கொலை செய்த கப்பல் மாலுமி…!!
Next post சீனாவில் ரூ.3 கோடி செலவில் மாவோ சே துங்குக்கு 118 அடி உயரத்தில் பிரமாண்டமான தங்கச்சிலை…!!