பன்றிக்காய்ச்சலால் கோஸ்டா ரிகாவில் 14 பேர் பலி…!!
Read Time:1 Minute, 12 Second
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கோஸ்டா ரிகாவில் பரவி வரும் பன்றிக்காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பெர்ணாண்டோ லோர்கா நேற்று தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு காய்ச்சல் ஆய்வகம் 14 பேருக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் மூச்சுத்திணறலுக்காக பலியான 5 பேருக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 9 லட்சத்து 50,000 தடுப்பூசிகளை வாங்கிய கோஸ்டா ரிகா, அதை மக்களுக்கு செலுத்தும் பணியில் ஏப்ரல் மாதம் முதல் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Average Rating