நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் சாவு…!!
Read Time:37 Second
காசிமேடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ரமேஷ் (45). மீனவர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 பேருடன் விசைப் படகில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென ரமேஷ் படகில் மயங்கி விழுந்தார். உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
Average Rating