கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு…!!
Read Time:1 Minute, 11 Second
இன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை காலப்பகுதியில் கொழும்பின் சில பகுதி வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வொன்றின் காரணமாக வீதிப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
அதன்படி நிதஹஸ் மாவத்தை, மெட்ரின் பிளேஸ் மற்றும் ஸ்ரீ லங்கா பதனம் வீதி ஆகிய வீதிகளில் போக்குவரத்து இவ்வாறு போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டும் என்று ருவண் குணசேகர தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழிப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating