மடிப்பாக்கம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி…!!
மடிப்பாக்கம், அண்ணா நகர் 2–வது தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கர் (வயது 20). பெருங்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் மோட்டார் சைக்கிளில் பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது பின்னால் வந்த தனியார் கம்பெனி பஸ் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாஸ்கர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் பள்ளிக்கரணையை சேர்ந்த சந்திரசேகரை கைது செய்தனர்.
பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தம் (55). இன்று காலை அதே பகுதியில் சி.டி.எச். சாலையை கடக்க முயன்றார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நித்யானந்தம் பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்த ஆவடியை சேர்ந்த தினேஷ், விமல் பலத்த காயம் அடைந்தனர்.
அம்பத்தூரில் இருந்து ஆவடி நோக்கி இன்று காலை ஆட்டோ சென்றது. பெண் உள்பட 6 பேர் இருந்தனர். திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் அருகே சென்றபோது ஆட்டோ மீது லாரி மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களை பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
Average Rating