குடும்பப் பெண்ணைக் கடத்த முயன்றோர் மடக்கிப் பிடிப்பு…!!
Read Time:1 Minute, 6 Second
கிளிநொச்சி கண்டாவளையில் குடும்பப் பெண் ஒருவரை கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து சிறிய ரக வாகனத்தில் வந்த ஐந்து பேரே இந்த கடத்திலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவன் வயலுக்கு சென்றிருந்த சமயம் பார்த்து, வீட்டினுள் நுழைந்த சந்தேக நபர்கள் அப்பெண்ணை வாகனத்துக்குள் ஏற்ற முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் அப்பெண் கூக்குரலிட்டு சத்தமிட்ட வேளை, ஊர் மக்கள் அவர்களை மடக்கி பிடித்து தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating