பதான்கோட் தாக்குதல்: பாகிஸ்தானில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது…!!
பதன்கோட் விமானப்படை தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா, ஜெலும் மறும் பாஹவல்பூர் ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை சந்தேகப்படும்படியான சிலரை பாகிஸ்தான் உளவுத் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தாக்குதல் அறிந்துகொள்ள விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பதான்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு உளவுத் துறையின் கூட்டு நடவடிக்கை குழு, ராணுவ உளவுத் துறை, பெடரல் விசாரணை நிறுவனம் மற்றும் போலீஸ்-க்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தாக்குதல் தொடர்பான சில ஆதாரங்களை பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
இதனிடையே, பதான்கோட் தாக்குதல் தொடர்பாக உயர்மட்ட கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Average Rating