உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து குண்டுகள் கண்டுபிடிப்பு

Read Time:1 Minute, 2 Second

உத்தரபிரதேசத்தில் ரேபரேலி நீதிமன்றத்தில் ஐந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேபரேலி நீதிமன்றத்தில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த ராஜாராம் என்பவரிடமிருந்து இந்த குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அவை உடனடியாக செயலிழக்க வைக்கப்பட்டன. திருமண விழா ஒன்றில் இந்த குண்டுகளை வெடிக்கச் செய்வதற்காக எடுத்துச்சென்றதாக விசாரணையில் அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சகா ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குஷ்புவுக்கு மீண்டும் இன்னொரு சிக்கல்!
Next post தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்கு