வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில் சேவை நிறுத்தம்…!!
Read Time:1 Minute, 7 Second
வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50 கி.மீ. (30 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது என்றாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அலுவலங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். சேத விவரங்கள் பற்றி தகவல் வெளியாகவில்லை. ஹோக்கைடோ பகுதியில் சமீபத்தில்தான் புதிதாக புல்லட் ரெயில் சேவை புதிதாக தொடங்கப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து தற்காலிகமாக புல்லட் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
Average Rating