இருள் சூழ்ந்த இடத்தில் தொலைக்காட்சி பார்கலாமா…?
Read Time:1 Minute, 28 Second
பெரும்பாலும், தொலைக்காட்சியில் படம் பார்க்க நினைக்கும்போதோ, கணினியில் வேலை பார்க்கும்போதோ அறை முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதையே நாம் விரும்புகிறோம். ஆனால் அப்படி செய்வது நம் கண்களுக்கு ஆபத்தானது என்கிறது ஆராய்ச்சி.
ஏனென்றால் இருள் சூழ்ந்த அறையில், தொலைக்காட்சி மற்றும் கணினியின் ஒளி நம் கண்களுக்கு ஏற்புடையதல்ல. அந்த ஒளி கண்ணில் பிரதிபலித்து விழித்திரையை பாதிக்கும். அவ்வாறு படம் பார்க்கும்போது கண்கள் மிகவும் சோர்வடையும்.
ஆகையால் தொலைக்காட்சியில் படம் பார்க்கும்போதோ கணினியில் வேலை பார்க்கும்போதோ அந்த அறையில் குறைந்தபட்ச ஒளியாவது இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் 3 அல்லது 4 மீட்டர் தொலைவிலும், 4 அடி உயரத்திலும் தொலைக்காட்சியை வைத்து படம் பார்ப்பதுதான் சரியான முறையாகும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்கள் சோர்வடையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
Average Rating