ஹம்பாந்தோட்டை நகர முதல்வருக்கு உதவி பொலிஸ் பரிசோதகரினால் மரண அச்சுறுத்தல்..!!
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவிற்கு ஹம்பாந்தோட்டை தலைமையக பொலிஸின் உதவி பொலிஸ் பரிசோதகரினால் தொடர்ந்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக, நேற்று (14) இடம்பெற்ற மாதாந்த நகரசபை கூட்டத்தின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
ஹம்பாந்தோட்டை பொலிஸ் மிகவும் நியாயமாக நடந்து கொள்ளும் பொலிஸ் நிலையம். எனினும் குறித்த உதவி பொலிஸ் பரிசோதகர் பல்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு நெருங்கியவர்கள் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதன்காரணமாக எனது வாழ்க்கைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இந்த சபையில் பகிரங்கப்படுத்துகிறேன். அந்த பொலிஸ் அதிகாரி எனது வாழ்க்கைக்கு தெளிவாக அச்சுறுத்தல் விடுப்பது இன்று (14) காலை உறுதியானது.
என்னுடைய ஊழியர் ஒருவரிடம், நான் ஒரு ரௌடி, பாதாள உலக நபர், அவனை கொலை செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் எனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இன்று பாதாள உலகம் இல்லை. கடந்த அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பாதாள உலகத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இப்பொழுது பொலிஸ் ஆணைக்குழு வந்து பொலிஸ் அரசாங்கம் ஒன்றை நடத்துகின்றது என எனக்குத் தோன்றுகின்றது. பொலிஸும் பாதாள உலகமாக மாறியுள்ளது.
எதாவது ஒரு நிலையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாக இருந்தால் அந்த பொலிஸ் அதிகாரி முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் என்று நான் இந்த சபையில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் தலைவர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பாக தான் பொலிஸ் மா அதிபரிடம் சாட்சிகளுன் தகவல் வழங்குவதாக அவர் இங்கு கூறியுள்ளார்.
Average Rating