ஜப்பானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பரிதாப பலி…!!

Read Time:1 Minute, 27 Second

f3a278a7-7934-4b2b-90f5-74e398ee2c56_S_secvpfஜப்பான் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள நகானோ பகுதியில் பேருந்து ஒன்று சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாயினர்.

ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள யமனோச்சி நகரில் உள்ள பனிச்சறுக்கு போட்டிகள் நடைபெறும் பிரபல ஸ்கிரிசார்ட்டிற்கு 41 சுற்றுலாபயணிகள் ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் சென்ற பஸ்
நகானோ மலைப்பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானது.

விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு சிறு குழுவினர் நேற்று மாலை டோக்கியோவில் இருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு கேபினேட்டின் முதன்மை செயலாளர் யோஷிஹைடு சுஹா தெரிவித்தார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணைக்கு ஜப்பான் போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில்…!!
Next post மாணவிக்கு செக்ஸ் தொல்லை: டெல்லியில் பேராசிரியர் கைது…!!