மாணவிக்கு செக்ஸ் தொல்லை: டெல்லியில் பேராசிரியர் கைது…!!

Read Time:1 Minute, 30 Second

59e1bc90-3cb6-4c44-b031-9dc59a49ffbd_S_secvpfடெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் சமூகப்பணி துறையில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிரின்ஸ் குமார். இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரிடம், தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் சிறப்பு வகுப்பு என அழைத்து செக்ஸ் தொல்லை கொடுத்ததால் அந்த பேராசிரியர் மீது கல்லூரி முதல்வரிடம் மாணவி புகார்அளித்தார். ஆனால் இது குறித்து நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து அந்த மாணவி பவானா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நேற்று பேராசிரியர் பிரின்ஸ் குமாரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பரிதாப பலி…!!
Next post 5 நொடிகளில் சரியும் அடுக்குமாடிக்கட்டிடங்கள்…!!