குழந்தையுடன் சென்ற தாயாரை கற்பழிக்க முயன்ற நபர்: மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த துணிச்சல்…!!

Read Time:3 Minute, 16 Second

rape_001ஜேர்மனி நாட்டில் குழந்தையுடன் நடந்து சென்ற இளம் தாயார் ஒருவரை கற்பழிக்க முயன்ற நபரை துணிச்சலாக போராடி நபரை தப்ப விடாமல் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஜேர்மனியில் உள்ள Lubeck என்ற நகரில் கடந்த செவ்வாய் கிழமை அன்று 31 வயதான தாயார் ஒருவர் தன்னுடைய குழந்தையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

பிற்பகல் நேரம் என்பதால் ஜனநடமாட்டம் குறைவாகவே இருந்துள்ளது.

அதே சமயம், கடந்த சில வாரங்களில் இந்த பகுதியில் கற்பழிப்பு முயற்சிகள் நடைபெற்றதால், அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது தாயாருக்கு பின்னால் சில அடிகள் தொலைவில் நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை அறிந்த தாயார் குழந்தையை தூக்கிக்கொண்டு தனது நடையை வேகப்படுத்தியுள்ளார்.

இந்த நேரத்தில் பின்னால் வந்த நபரும் வேகத்தை கூட்டி தாயாரை நெருங்கி வந்துள்ளார்.

அப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாயாரின் அந்தரங்க பகுதியில் கை வைத்த அந்த நபர், அவரை பிடித்து இழுத்து அணைக்க முயன்றுள்ளார்.

சூழ்நிலையை அறிந்த அந்த பெண், தனது முயற்சியை கைவிடாமல் அந்த நபரை துணிச்சலாக எதிர்க்கொண்டு போராடியுள்ளார்.

சில நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில் தனது எண்ணம் நிறைவேறாது என நினைத்து அந்த நபர் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், மடக்கி பிடித்திருந்து அந்த பெண் அவர் தப்பி விடாதவாறு கிடுக்கு பிடிபோட்டு சிறை வைத்துள்ளார்.

இந்நிலையில், அங்கு கூடிய சில நபர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், அதுவரை தாயாரின் உடும்பு பிடிக்குள் இருந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

எதிராளி பலமாக இருந்தும் தனது முயற்சியை கைவிடாமல் துணிச்சலாக போராடி தன்னையும் காத்துக்கொண்டு நபரையும் பொலிசாரிடம் ஒப்படைத்த அந்த தாயாரை அங்குள்ள அனைவரும் பாராட்டினர்.

மேலும், இதே பகுதியில் நடைபெற்ற கற்பழிப்பு முயற்சிகளுக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி…!!
Next post ஓடும் ரயில் கதவில் சிக்கிய உடுப்பு: பல மைல்கள் இழுத்து சென்றதால் பலியான வாலிபர்…!!