பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது…!!
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கோணியக்குறிச்சி மாதாக்கோவில்தெருவைச் சேர்ந்த சிங்காராயன் மகன் வினோதகன் (வயது 20). இவர் தஞ்சையில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து வந்தார்.
இந்நிலையில் கோணியக்குறிச்சியில் நேற்று இரவு மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் சந்துரு (27), ஜெகதீசன் மகன் ராஜா (37), தங்கையன் மகன் சேகர், லோகநாதன் மகன் ரமேஷ் ஆகியோர் மின்விளக்குகளை கட்டி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சென்ற வினோதகன் அவர்களிடம் மின்விளக்குகளை கட்டுவது தொடர்பாக ஆலோசனை கூறினார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் டியூப்லைட்டால் வினோதகன் தலையில் அடித்து கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த வினோதகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மெலட்டூர் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சப்–இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சந்துரு, ராஜா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
Average Rating