இலங்கை கடற்றொழில் சங்க நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்தொகை 689 மில்லியன்கள் வரை அதிகரிப்பு…!!
Read Time:1 Minute, 23 Second
இலங்கை கடற்றொழில் சங்கத்தின் பல நிறுவனங்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் தொகை 689 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியம், உள்நாட்டு இறைவரித்திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை , மற்றும் வௌிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மீன்களுக்காக செலுத்தப்படவுள்ள கடன்தொகை என்பவை இவற்றுள் உள்ளடங்குவதாக இலங்கை கடற்றொழில் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி துசித அளுத்பட்டபெந்திகே தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மாத்திரம் 77 மில்லியன் ரூபா நிதி செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு உரிய முறையில் நிதி செலுத்தப்படாமையால் ஊழியர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இலங்கை கடற்றொழில் சங்கங்களின் பொது சேவைச் சங்கத்தின் செயலாளர் ஜே.எச்.நிசாந்த தெரிவித்தார்.
Average Rating