பெஷாவரில் சோதனைச்சாவடி அருகே வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி…!!

Read Time:1 Minute, 20 Second

b252c3b9-cc9f-40d9-9eed-22ed83e7676c_S_secvpfபாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் உள்ள பரபரப்பான கர்கானோ மார்க்கெட் பகுதியில் சற்று முன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலியானவர்களில் 4 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கம்ரூத் கஸ்தார் பகுதியில் பொறுப்பில் உள்ள நவாப் ஷா என்ற அதிகாரியின் காரை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை வைத்து பார்க்கையில், இது கார் வெடிகுண்டா அல்லது ரிமோட் வெடிகுண்டா என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது. விபத்து குறித்த மேலதிக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானின் நிலையற்ற தன்மைக்கு அமெரிக்காவே காரணம்: சர்தாஜ் அஜீஸ் பகிரங்க குற்றச்சாட்டு…!!
Next post ஏமனில் போலீஸ் கட்டிடம் மீது சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: 26 பேர் பலி…!!