இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை…!!

Read Time:1 Minute, 40 Second

uyiதிருகோணமலை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தைப்பொங்கலை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கமையவே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் துறைமுக பொலிஸாரால் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தரப்பத்திலேயே மீனவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் தமிழகத்தின் நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கூறினார்.

இருப்பினும் மீனவர்களுடைய 3 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் விடுவிக்கப்படவில்லை.

குறித்த மீனவர்கள் 29 பேரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி கடற்படையினரால் முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மீனவர்களை இந்திய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு கடற்படைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் காதலியை பலாத்காரம் செய்த காதலன் கைது…!!
Next post இராணுவ பஸ் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு…!!