ஆற்காடு அருகே பைக் மீது கார் மோதி கணவன்–மனைவி பலி…!!

Read Time:1 Minute, 33 Second

c1b99c00-137c-4406-a0d5-e63052279857_S_secvpfஆற்காடு அருகே உள்ள ரத்தினகிரி கீழ்மின்னலை சேர்ந்தவர் துளசி தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். மகன் சிட்டிபாபு (14). இவர், மேல்விஷாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான்.

வாலாஜாவில் நடந்த உறவினர் ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துளசி மனைவி, மகனுடன் நேற்று மாலை பைக்கில் சென்றார்.

நள்ளிரவு 12 மணியளவில் 3 பேரும் வீடு திரும்பினர். மேல்விஷாரம் சாதிக்பாஷா நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது, பின்புறம் வந்த கார் ஒன்று பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

பைக்கில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட துளசியும், அவரது மனைவி கற்பகமும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

அவர்களது மகன் சிட்டிபாபு படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜிக்கா வைரஸ் தாக்கி பிரேசிலில் மேலும் 5 குழந்தைகள் பலி…!!
Next post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவியை அரிவாளால் வெட்டி தற்கொலை செய்த வாலிபர்: போலீசார் விசாரணை…!!