சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி…!!

Read Time:1 Minute, 38 Second

b5bcce86-20f0-4111-a719-b54170c43933_S_secvpfசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது. இதனிடையே ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலை ரஷ்யாவின் போர் விமானங்கள் நடத்தியதாக சிரிய கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.

காஸம் கிராமத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக அந்த கண்காணிப்புக் குழு கூறியது.

10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கண்காணிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருக்கு பெருத்து, தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கல்லவா! -மாதவன் சஞ்சயன்…!!
Next post அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!