வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து விட்டார்: ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வீணாக்கிய பெண்…!!
இங்கிலாந்தில் சமீபத்தில் ஜாக்பாட் பரிசு சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதில் ஒரு சீட்டுக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் பரிசு தொகை விழுந்தது. அந்த அதிர்ஷ்ட சீட்டை வொர்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நட்டு படேல் என்பவர் விற்பனை செய்து இருந்தார்.
ஆனால் அந்த லாட்டரி சீட்டை வாங்கியது யார்? என தெரியாமல் இருந்தது. ஏனெனில் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட வில்லை. இந்த நிலையில் அந்த லாட்டரி சீட்டை ஒரு பெண் வாங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால், அதை அவர் பத்திரமாக வைத்திருக்கவில்லை. மாறாக அதை வாஷிங்மெஷினில் துணிகளுடன் போட்டு துவைத்து வீணாக்கி விட்டார்.
பாதி கிழிந்த நிலையில் அது உள்ளது. இது குறித்து அந்த சீட்டை விற்ற கடைக்காரர் நட்டு படேலிடம் தெரிவித்தார். இந்த தகவல் லாட்டரி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்ற சீட்டுடன் இன்னும் ஒரு மாதத்துக்குள் தொடர்பு கொள்ளும்படி இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Average Rating