மதுரையில் கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து ரூ.4 லட்சம் நகை–பொருட்கள் கொள்ளை…!!
மதுரை மூன்றுமாவடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கமலா. இவர்கள் குடும்பத்துடன் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று 3 பேர் அவர்களது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் கதவை திறக்க முயன்றபோது அக்கம் பக்கத்தினர் வந்து யார் நீங்கள் எனக்கேள்வி கேட்டனர். அதற்கு அந்த நபர்கள் நாகராஜனின் உறவினர்கள் என்றும், காரைக்குடியில் இருக்கும் அவர் ஒரு பொருளை எடுத்து வரும்படி சாவி கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தனர்.
அதனை நம்பிய அக்கம் பக்கத்தினர் தங்கள் வேலைகளை பார்க்க சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று வீடு திரும்பிய நாகராஜன், கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 19 பவுன் நகைகள், டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
இது குறித்து தல்லாகுளம் போலீசில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘நந்தா’ திரைப்படத்தில் ‘கருணாஸ்’ கொள்ளையடிக்கும் காட்சிபோல கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து நகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating