கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை உயிரிழப்பு..!!
Read Time:55 Second
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சாகரபுரப் பகுதிக் கடலில் இன்று திங்கட்கிழமை நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதுடைய இவெக்சி ஸ்டீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன், மனைவி ஆகிய தாம் இருவரும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் மனைவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating