துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இரு நண்பர்கள் – ஒருவர் கவலைக்கிடம்…!!
Read Time:1 Minute, 8 Second
ஹொரனை – வேரவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள், இரண்டு பேர் காயமடைந்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ஹொரனை ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
குறித்த இருவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
ஹொரனை – அங்குறுவாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 22 , 28 வயதினையுடைய இளைஞர்களே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இளைஞர்கள், இருவரும் நேற்றைய தினம், தனது நண்பனை சந்திக்க சென்றிருந்த பொழுது, அங்கு வந்த ஒருவரினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating