இளம் பெண்ணை மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இராணுவ சிப்பாய் கைது…!!
வேலைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருரை, மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும், இராணுவ புலனாய்வுப் பிரிவு சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நவகத்தேகம – மீவெல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்பதோடு, கரன்தெனிய சன்னத்ய புலனாய்வு பிரிவில் பணி புரியும் இராணு சிப்பாய் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 26ம் திகதி மாலை 06.30 அளவில் நவகத்தேகம நகரில் வைத்து சந்தேகநபர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்டதாக, மீவெல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து குறித்த இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating