நுகர்வுக்குத் தகுதியற்ற 4 இலட்சம் லீற்றர் தேங்காய் எண்ணெய் மீட்பு…!!
Read Time:1 Minute, 21 Second
நுகர்வுக்குத் தகுதியற்ற தேங்காய் எண்ணெய் ஒருதொகையுடன் லொரியில் பயணித்துக் கொண்டிருந்த இரு சந்தேகநபர்கள் கசலக பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கசலக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஷ இரசாயனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட கொள்கலன்களில் இவை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதோடு, நான்கு இலட்சம் லீற்றர் எண்ணெய் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவை கொழும்பில் இருந்து மஹியங்கனைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, சந்தேகநபர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட எண்ணையுடன் இருவரும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Average Rating