அமைதிப் பேச்சுவார்த்தையை சிரிய எதிர்கட்சி புறக்கணிப்பு…!!
Read Time:1 Minute, 23 Second
சிரியாவில் அரசியல் தீர்வொன்றை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின் தாம் கலந்து கொள்ளப்போவதில்லை என சிரியாவின் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் முற்றுகை மற்றும் குண்டுத்தாக்குதல்கள் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்படும் வரை எதிர்கட்சித் தரப்பினரின் பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு செல்லப்போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து வருட காலப்பகுதியினுள் அங்கு நடைபெறும் யுத்தம் காரணமாக, இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இது தவிர, ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating