ஏமன்: சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் – இருவர் பலி…!!

Read Time:1 Minute, 32 Second

4a964a88-53d5-43c0-a61b-85486bd73b0c_S_secvpfஏமன் நாட்டிலுள்ள துறைமுக நகரமான ஏடெனில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது ஐ.எஸ். தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் இருவர் பலியாகினர்.

மத்திய ஏடென் நகரில் உள்ள வணிகப்பகுதியில் இன்று வேகமாக வந்த ஒருகாரை சோதனைச்சாவடி அருகே காவலுக்கு நின்றிருந்த போலீசார் நிறுத்த முயன்றனர். அதையும் மீறி வேகமாக வந்த கார் திடீரென வெடித்து சிதறியதில் இருவர் பலியாகினர். படுகாயமடைந்த ஐந்துபேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலை நடத்தி பலியான தீவிரவாதியின் பெயர் ஒவைஸ் அல் அதானி என்று ஐ.எஸ். தீவிரவாதிகளின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் இல்லத்தின் அருகே இதேபோல் கார்குண்டு மூலம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஆறுபேர் பலியானது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பகாலத்தில் பாரசிடமால் மருந்து சாப்பிட்டால் குழந்தையின் உடல் நலத்துக்குகேடு: ஆய்வில் புதிய தகவல்…!!
Next post குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை…!!