அமெரிக்காவில் மாமியாரை கொன்ற இந்திய மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்…!!
அமெரிக்காவில் வசித்தும் வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, மாமியாரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் வசித்து வருபவர் தஸ்நீம்(47). இவரது மாமியார் சபியா திவான்(73). இந்நிலையில், மாமியார் திவான் கடந்த ஜனவரி 26-ம் தேதி மாலை மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. தஸ்நீம் தன்னுடைய மாமியாரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் அந்த வீட்டிற்கு வேறு யாரும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் தஸ்நீமிற்கு ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு சுமார் ரூ.7 கோடி) ஜாமீன் பிணைத் தொகையாக கட்ட வேண்டுமென்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating