அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது…!!
Read Time:1 Minute, 16 Second
அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பேருவளை – பாதாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸ் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் மூலம் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக ஒற்றை குழல் துப்பாக்கியும் அதற்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் பாதாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating