கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை..!!
Read Time:56 Second
ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1999ம் ஆண்டு இரத்தினபுரி, தொடம்பே, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட காலமாக இடம்பெற்று வந்த நிலையில் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating