குளிக்கச் சென்ற பெண் முதலைக்கு இரையாகி பலி..!!
Read Time:40 Second
கிரிந்தி ஓயாவுக்கு குளிக்கச் சென்ற பெண்ணொருவர், முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார். திஸ்ஸமகாராமை, கோணகமுவ, கோன்வெலேனப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) இச்சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கோணகமுவப் பகுதியைச் சேரந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக திஸ்ஸமகாராமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating