சிறுநீரக நோய் காணப்படும் பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர்..!!
Read Time:1 Minute, 21 Second
சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு 700 கோடி ரூபாய் செலவில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ், 39 குடிநீர்த் திட்டங்களை ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் முதற் கட்டமாக வடமத்திய மாகாணத்தில் வெலிகந்த, ஹிங்குரங்கொடை, தமங்கடுவ, மிஹிந்தலே மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் ஐந்து திட்டங்களும் மஹியங்கனை, வில்கமுவ மற்றும் வட வேல் மாகாணத்திலும் மூன்று திட்டங்களும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டத்தின் கீழ் திரப்பனை, கெக்கிராவை மற்றும் இப்பாகமுவை ஆகிய பிரதேசங்களிலும், மூன்றாம் கட்டத்தில் மற்றைய அனைத்துத் திட்டங்களையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன
Average Rating