சம்பூர் அனல்மின் நிலையக் காணி உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல்..!!
திருகோணமலை சம்பூர் அனல்மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியிலிருந்து உரிமையாளரை வெளியேற்றுவதற்காக மூதூர் பிரதேசசபையினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உறுதிக்காணியிலிருந்து வெளியேற்றுவதற்காகவே தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வைரமுத்து அருமைத்துரை தெரிவித்தார்.
மூதூர் நீதிமன்றத்திலிருந்து மார்ச் மாதம் 3 ஆம் திகதி 9 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பூர் அனல் மின் நிலையம் காரணமாக 25 இற்கும் மேற்ப்பட்ட குடியிருப்பு காணிகளிலிருந்து மக்கள் வெளியேறவேண்டிய நிலையிலுள்ளதாகவும், எனினும் தனது காணியை மாத்திரம் முற்றுமுழுதாக இழக்கும் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அனல் மின்நிலையத்திற்கான நீர் செல்லும் குழாய் தனது காணியூடாக செல்வதாகவும் தம்மை உடனடியாக காணியிலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும், எனினும் தான் மாற்று காணி கோரியதாகவும் அதனைக் கூட தரமுடியாது என பிரதேசசபைக்குத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Average Rating