மதுரையில் பஸ் கண்ணாடிகளை உடைத்த அஜித் ரசிகர்கள் 7 பேர் மீது வழக்கு
Read Time:1 Minute, 3 Second
நடிகர் அஜித் நடித்த `பில்லா’ திரைப்படம் மதுரையில் ரிலீஸ் செய்யப்பட்டது. `பில்லா’ திரையிடப்பட்ட மதுரை அண்ணாநகரில் உள்ள தியேட்டர் முன்பு ரசிகர் கள் திரண்டனர். அப்போது டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற் பட்டதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்களின் கண்ணாடிகளை ரசிகர்கள் உடைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக அண்ணாநகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பஸ்களை சேதப்படுத்திய தாக அஜித் ரசிகர்கள் 7 பேர் மீது அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.