கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது..!!
மதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ரமேஷ், வினோத், விக்னேசின் மனைவி பரமேஸ்வரி (25). இவரது உறவினர் பாலாஜி. இவரது மனைவி சிவகாமி. இவர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் பெரம்பூர் வந்து அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினர்.
மதுரவாயல் அருகே சென்ற போது, தாழம்பூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளை இடிப்பது போல் சென்றது.
இதனால் விக்னேசுக்கும் பஸ் டிரைவர் நரசிம்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நரசிம்மன் பஸ்சை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து நரசிம்மனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரம் அடைந்து 6 பேரும் நரசிம்மனை தாக்கினர். பின்னர் அவர்கள் தப்பி சென்றனர்.
நரசிம்மனை தாக்கியவர்களை உடனே கைது செய்ய கோரி பணியில் இருந்த டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இரவு பயணிகள் அவதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கோயம்பேடு உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் ரமேஷ், வினோத், பரமேஸ்வரி சிவகாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
Average Rating