கொடுங்கையூரில் தாய் திட்டியதால், சிறுவன் தற்கொலை…!!
கொடுங்கையூர், எழில் நகர் ‘ஏ’ பிளாக் 11–வது தெருவில் வசித்து வருபவர் காதர் முகைதீன். இவரது மகன் பீர்முகமது (வயது16). மரக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக பீர்மகமது சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனை அவரது தாய் கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த பீர்முகமது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பூர், அழகர்சாமி தெருவில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது24). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை மனைவி கண்டித்ததாக தெரிகிறது.
இதில் மனவேதனை அடைந்த செந்தில்குமார் பெரம்பூர் அம்மன் கோவில் தெரு அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கினார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பலியானார்.
இதுகுறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating