ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நடத்துனர் சிறையில்…!!
Read Time:1 Minute, 16 Second
பாலர் பாடசாலை ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பயணிகள் பேரூந்து ஒன்றின் நடத்துனர் ஒருவர் எல்பிட்டிய காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமை (27) குறித்த ஆசிரியை இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த ஆசிரியை ஊரகஹா செல்லும் பேரூந்தில் பயணித்து கொண்டிருக்கும் போது குறித்த நடத்துனரால் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அவர் கரன்தெனிய காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்
எல்பிட்டிய காவற்துறையினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ள நிலையில் ,எதிர் வரும் மாதம் 3ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு எல்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating