நட்டாங்கண்டல் பகுதியில் விபத்து : பெண் சாவு…!!
Read Time:57 Second
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உழவு இயந்திரம் வீதியில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தவிபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டுள்ளனர்.
Average Rating