மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு…!!
Read Time:58 Second
கொச்சிக்கடை, மடம்பெல்ல, வெல்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 8.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பலர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating