கொமடியை விமர்சித்ததால் ஆத்திரம்: மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கிய கொமடியன்…!!

Read Time:2 Minute, 22 Second

comedian_smashes_003ஹாங்காங்கில் நடைபெற்ற கொமடி இரவு நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரை அந்த கொமடியன் மதுக்கிண்ணத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கொமடி இரவு என்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு நாட்டுப் பார்வையாளர்களுடன் நடந்துள்ளது.

நிகழ்ச்சியின் இடையே அந்த கொமடியன் சீனா நாட்டிற்கு எதிரான சில கொமடிகளை கூறி பார்வையாளர்களை சிரிப்பூட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது பார்வையாளர்களில் ஒருவரான ரவி கணேசமூர்த்தி என்பவர் இனவாதம் கலந்த கொமடி வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் அந்த கொமடியன் மீண்டும் சீனாவுக்கு எதிரான கொமடிகளை பேசியுள்ளார். அப்போதும் அதுபோன்ற கொமடிகள் வேண்டாம் என ரவி கூறியது அந்த கொமடியனை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

இதனையடுத்து பியர் கிண்ணமொன்றை எடுத்துக்கொண்ட அந்த கொமடியன், ரவி கணேசமூர்த்தியின் முகத்தை குறிவைத்து தாக்கியுள்ளார்.

இதில் ரவியின் முகத்தில் பலத்த காயமேற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கப்பட்டுள்ளதால் 40 தையல்கள் போடவேண்டி வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட கொமடியனை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பொலிசாரிடம் நடந்த சம்பவங்களை தாம் தெரிவித்துள்ளதாகவும்,

இனி அவர்களே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரவி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…!!
Next post இந்தியாவிடம் ‘சாம்-7’ ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 71) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!