விரும்பியவர்களுக்கு மனைவியாக இருக்க பெண்களை கடத்தி வாடகைக்கு விட்டார்: துணை நடிகை கைது
ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியை சேர்ந்தவர் சைலஜா (வயது 30). தெலுங்கு படங்களில் துணை நடிகை யாக நடித்துள்ளார். இவர் சினிமா ஆசையில் வரும் பெண்களை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில் தள்ளி வந்தார். இதில் நல்ல வருமானம் கிடைக்கவே விபசார தொழில் முறையை வித்தியாசமாக மாற்றினார். ஆந்திராவில் இருந்து அழகான இளம் பெண்களை அழைத்து வந்து விருப்பப்படுகிறவர்களுக்கு 3 நாட்களில் இருந்து ஒரு வாரம் வரை வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்தார். அந்த குறிப்பிட்ட நாட்களும் அந்த பெண் தன்னை அழைத்து செல்பவருக்கு மனைவி போல நடந்து கொள்ள வேண்டும். இதற்காக ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்தார். இதற்கு வாடிக்கையாளரை வலைவீசி பிடிப்பதற்காக சைலஜா இணைய தளம் ஒன்றும் தொடங்கி இருந்தார். அதில் பெண் துணை வேண் டுமாப வாடகைக்கு பெண் வேண்டுமாப என்ற வாசகங்கள் இடம் பெறும். அதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் சைலஜாவின் போன் எண் வரும் அதில் தொடர்பு கொண்டு சைலாஜா வுடன் பேசலாம். அப்போது எத்தனை நாளுக்கு பெண் வேண்டும் என்று கேட்பார். அந்த நாட்களை குறிப்பிட்டு கூறினால் அவர் அந்த பெண்ணை அனுப்பி வைப் பார்.
இந்த பெண்ணை சைலாஜாவே நேரடியாக ஆந்திராவில் இருந்து ரெயிலில் அழைத்து வருவார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வாடிக் கையாளர் நிற்க வேண்டும். அவரிடம் பெண்ணை ஒப்ப டைத்து விட்டு உரிய கட்ட ணத்தை வாங்கி செல்வார். அவருக்கு உதவுவதற்காக புரோக்கர் ஒருவரும் சென்னை யில் செயல்பட்டு வந்தார்.
சைலஜாவின் நூதன விபசார தொழில் குறித்து விபசார தடுப்பு பிரிவு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் சங்கர பாண்டியன், சப்-இன்ஸ்பெக் டர் பீட்டர் ஆகியோர் சைலஜாவை கையும், களவு மாக பிடிக்க முடிவு செய்தனர்.
போலீஸ்காரர் ஒருவர் இணைய தளத்தில் உள்ள சைலஜா போன் எண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். “நான் தொழில் அதிபர் எனக்கு வாடகைக்கு பெண் வேண்டும் என்று கேட்டார்” அதை உண்மை என நம்பிய சைலஜா ஒரு பெண்ணுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந் தார். அப்போது தயாராக இருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
சைலஜா அழைத்து வந்த பெண்ணின் பெயர் சத்யா (வயது 20). ராஜமுந்திரியை சேர்ந்தவர். அவரை மீட்டு பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் சைலஜாவிடம் விசாரணை நடத்தியபோது இதுவரை 200-க்கும் மேற்பட்ட பெண்களை சென்னையில் வாடகைக்கு விட்டிருப்பதாக கூறினார். 14 வயதில் இருந்து 22 வயது வரை உள்ள பெண்களை மட்டுமே இந்த தொழில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் பல்வேறு தொழில் அதிபர்கள், கம்ப்ïட் டர் என்ஜினீயர்கள் போன்ற வர்களுக்கு வாடகைக்கு விட்ட தாக கூறினார். அவருக்கு புரோக்கராக இருந்தவரை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.